ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-30 15:47 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்பசெட்டி தெருவில் சாக்கடை கால்வாயின் மேல் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான பாலத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்