சாலை வசதி தேவை

Update: 2022-10-26 16:15 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் எம்.என்.பட்டி கிராமம் கோவிலூர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் ரெயில்வே பாலம் வழியாகத்தான் செல்கின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொளசம்பட்டி முதல் மேச்சேரி வரை உள்ள தார் சாலையோடு இணைத்து அந்த பகுதிக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

-சி.முத்துசாமி, எம்.என்.பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்