சாலையை புதுப்பிக்கலாமே!

Update: 2022-10-26 16:03 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி மெயின் ரோடு பழைய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு வரை உள்ள பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிந்தும் இதுவரை கால்வாய் சரியாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்த நிலையிலும் சாலை சீரமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை பள்ளத்தை சீரமைத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.

- சம்பத், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்