முட்புதர்கள் அகற்றப்பட்டது

Update: 2022-07-16 09:25 GMT

ராஜாக்கமங்கலம் -ஈத்தாமொழி மேற்கு கடற்கரை சாலையின் ஓரத்தில் முட்புதர்களும், செடிகளும் வளர்ந்து காணப்பட்டது. இதனால், பாதசாரிகளும், நடைப்பயிற்சி மேற்பவர்களும் வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்த 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் ஓரங்களில் வளர்ந்து நின்ற முட்புதர்களை வெட்டி அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரித்துள்ளனர்.

நாகராஜன், ராஜாக்கமங்கம்.

மேலும் செய்திகள்