மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.