சன்னியாசிகுண்டு பைபாஸ் சாலையில் கிச்சிப்பாளையம் பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க முன்வருவார்களா?