பாலூர் அருகே வானமாதேவி- விலங்கல்பட்டு செல்லும் சாலை சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு முற்றிலும் சேதமடைந்து வாகனங்கள் செல்லவே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் சாலையை சீரமைத்து சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.