சாலையில் உருவாகும் பள்ளம்

Update: 2022-09-24 08:58 GMT

குளச்சல் நகராட்சி உட்பட்ட காமராஜர் சாலை உள்பக்கம் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. அதன்பின்பு தோண்டப்பட்ட இடங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால், சாலை சேதமடைந்து பள்ளம் தோன்றியுள்ளது. இந்த பள்ளம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தோண்டப்பட்ட இடங்களை சரியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

மேலும் செய்திகள்