நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2022-09-24 08:34 GMT

தக்கலையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் மணலி சந்திப்பில் குடிநீர் வினியோகிக்கும் குழாயின் வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களாக அந்த சிமெண்டு சிலாப் கொண்டு மூடாமல் திறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்டு சிலாப்பை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்