தடுப்புசுவர் வேண்டும்

Update: 2022-09-22 09:37 GMT

கீழஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் வெள்ளமண்ணோடை பகுதியில் ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஒரு பக்கமுள்ள தடுப்புசுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டனி சதீஷ், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்