மயிலாடுதுறை மாவட்டம் புலவனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. . இதன்காரணமாக மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் புலவனூர்