மயிலாடுதுறை மாவட்டம் பனையகுடியில் தார்ச்சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் இங்கு உள்ள மண்பாதை முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பனையகுடி