சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-19 09:15 GMT

கருங்கல் அருகே உள்ள இலவன்படவிளையில் இருந்து படுவாகுளம் பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த சாலையில் உள்ள தார் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜெகன், ெதருவுக்கடை.

மேலும் செய்திகள்