சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் இருந்து வேதாரண்யம் ஒன்றியம் கரியாப்பட்டினம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்.உம்பளச்சேரி