சாலையின் அவலம்

Update: 2022-09-13 08:55 GMT

குருந்தன்கோடு ஒன்றியம், கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலகட்டிமாங்கோடு பகுதியில் உள்ள கோவிலுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நின்று வாத்துகள் மேயும் சகதிகாடாக மாறி வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இ.முருகன், கட்டிமாங்கோடு.

மேலும் செய்திகள்