நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் வழியில் 2 மாதங்களாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் ஜல்லிகற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.. எனவே இந்த சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனசேகரன், வெண்ணந்தூர், நாமக்கல்.