திருவாரூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்