திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் தென்குவளவேலி ஊராட்சி வடகுவளவேலி தெருவில் உள்ளது குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக சாலை உள்ளது . இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தென்குவளவேலி