தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளங்களை உடனடியாக மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்தகுமார், நெசவாளர் நகர், தர்மபுரி.