பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-09-01 14:28 GMT


மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ் சேரி அருகே உள்ள சாலையில் கருங்கல் ஜல்லிகள் சாலையில் கொட்டப்பட்டு சாலை பணியும் நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்