வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-29 14:52 GMT


திருவாரூர் -மயிலாடுதுறை சாலையில் வண்டாபளையம் என்ற இடத்தில் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமான கண் நோயாளிகள் கண் சிகிச்சை செய்ய வந்து செல்கின்றனர். இந்த சாலையில் போக்கு வரத்து அதிகம் உள்ளதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள், மற்றும் நோயாளிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்தசாலையில் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர் 

மேலும் செய்திகள்