திருவாரூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து தேர் முட்டு செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்