நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தொட்டிபட்டி செல்லும் சாலையில் சேமூர் ஏரி அருகே சாலை வளைவில் பைப் லைன் உடைப்பை சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. அந்த பணி முடிந்தும் குழியை மூடி சாலை அமைக்காததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழி அருகே வைக்கப்பட்டுள்ள கற்களில் மோதி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கேசவன், ஓ.சவுதாபுரம், நாமக்கல்.