சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-26 13:19 GMT


திருவாருர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,எடையூர் சங்கந்தி ஊராட்சியில் உள்ள மேட்டுகேட்டாகத்திலிருந்து எடையூர் சங்கந்தி செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. .இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவிந்தன், திருவாரூர்.

மேலும் செய்திகள்