பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் கடைத்தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமருகல்