சேறும் சகதியுமான சாலை

Update: 2022-08-24 14:55 GMT


மன்னார்குடியில் சிராஜ்நகர், சுஜித் நகர் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதிஇல்லை. இதனால் அந்தபகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், மன்னார்குடி.

மேலும் செய்திகள்