சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-09 08:06 GMT

திருவட்டார் அருகே உள்ள சித்ரங்கோடு முதல் வலியாற்றுமுகம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். மேலும், இந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து புழுதிகள் சாலையில் அடித்து வரப்படுகிறது. இதனால் சாலை மீண்டும் சேறும், சகதியுமாக மாறுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மேத்யூ, பொன்மனை

மேலும் செய்திகள்