புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2023-07-02 12:35 GMT

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் சக்திவிநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. மேலும் விளையாட்டு உபகரணங்களும் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி விஷஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்-சிறுமிகள் பூங்காவிற்குள் சென்று விளையாட அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் புதர்மண்டி கிடக்கும் பூங்காவில் செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ்குமார் கோகிலா, திருப்பூர்.

மேலும் செய்திகள்