விருதுநகர் மாவட்டம் பட்டேல் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதற்கு மிகவும் சிரமமடைவதோடு, காயம் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர்கள் நலன் கருதி மேற்கண்ட பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றி புதிய உபகரணங்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.