பூங்காவைப் பாதுகாக்க வேண்டும்

Update: 2026-07-19 12:27 GMT

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள புராதன பூங்காவில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நடைபயிற்சி பாதை மற்றும் ராட்டினம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு பூங்காவின் மேல் பகுதி பல மாதங்களாக மூடப்பட்டு, செடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது. மேல் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, அந்த பகுதியை தூய்மைப்படுத்தி அங்குள்ள புராதன சின்னங்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்