வெண்ணந்தூர் அடுத்து அளவாய்ப்பட்டி சிறுவர் பூங்கா அருகே தினமும் குழந்தைகள் அதிக அளவு விளையாடுவதற்காக வருகின்றனர். இப்பகுதியில் மது பிரியர்கள் அமர்ந்து பூங்காவிற்கு உள்ளும், வெளியும் மது அருந்துகின்றனர். இதனால் குழந்தைகள் அச்சமடைகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி போலீசார் பூங்காவில் இரவு நேரங்களில் மது அருந்துபவர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.