சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தர்மன் நகர் சிறுவர் பூங்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், சுகாதாரமற்ற முறையிலும் காணப்படுகிறது. இதனால் இந்த பூங்காவை சிறுவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.