நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-06-21 11:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, நண்பர்கள் நகர் பகுதியில் பூங்கா உள்ளது. இது அந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ஏராளமான குடும்பங்கள் இந்த பூங்காவிற்கு வந்து பொழுதுபோக்குவார்கள். ஆனால் இந்த பூங்காவின் அருகில் குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே வீசப்படுகிறது. மேலும் இந்த குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நச்சுகலந்து புகை பரவி, அனைவரின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களாக என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்