பூங்காவை பராமரிக்க வேண்டும்

Update: 2024-02-18 18:14 GMT

ஆற்காடு நகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஆற்காடு பஸ் நிலையத்தையொட்டி உள்ளது. இந்தப் பூங்காவில் ஓய்வுபெற்ற ஊழியர்கள், சிறுவர்-சிறுமிகள், பெண்கள் என பலர் மாலை நேரத்தில் நடைபயிற்சி, இளைப்பாற வருவார்கள். ஆனால், பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது. பூங்காவுக்கு யாரும் சரியாக வருவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை மீண்டும் பராமரிக்க வேண்டும்.

-இளஞ்செழியன், ஆற்காடு.

மேலும் செய்திகள்