வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரேசா 3-வது தெருவில் பூங்கா உள்ளது. அந்தப் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் பயன்படுத்தப்படாத குப்பை சேகரிக்கும் வண்டியை அப்படியே விட்டுவிட்டு அதன் அருகே குப்பைகளை கொட்டி உள்ளனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.