புதர் மண்டி கிடந்த பூங்காவை சுத்தம் செய்து சமூக சேவை செய்பவர்களை பற்றி தவறாக புகார் அளிப்பவர்களின் செய்திகளை பதிவிட வேண்டாம் என்ற கோரிக்கை:
திண்டுக்கல் ராஜலட்சுமி நகரில் உள்ள பூங்கா கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புதர் மண்டி பொதுமக்கள் யாரும் உள்ளே நடை பயிற்சி மற்றும் சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது அதை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் மாநகராட்சி அனுமதி பெற்று சுத்தம் செய்து சிறுவர்கள் விளையாடுவதற்காக மற்றும் இளைஞர்கள் நடைபயிற்ச்சி மேற்கொள்பவர்கள் எந்த ஒரு பாதிப்பும் அடையாத வகையில் கிரிக்கெட் வலை அமைத்தும், பெயிண்ட் அடித்தும், லைட் வசதி, தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்பாடு வருகின்றனர். அதை ஒரு சில நபர்கள் மட்டும் தங்களின் சுய லாபத்திற்காக தடுக்க நினைத்து பல்வேறு தவறான செய்திகளை பரப்பியும், புகார்கள் அளித்தும் வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஒரு சிலரின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களுக்கு தொய்வை ஏற்படுத்தும் எனவே இது போன்ற செய்திகளை இனிமேல் தாங்கள் கள ஆய்வு செய்த பின்பு பதிவிடும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.