திருவள்ளூர் மாவட்டம், பெரிய சேக்காடு பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் தெருநாய்களால் மிகவும் சிரமம் அடைகிறார்கள். குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சாலைகளில் சுற்றி திரிவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கோ, டியூசனுக்கோ சைக்கிளில் செல்ல முடியவில்லை. சாலையில் செல்பவர்களை கடிக்க ஓடிவரும் இந்த தெருநாய்களின் பிரச்சனையை தீர்க்க துறைசார்ந்த அதிகாரிகள் முன்வருவது எப்போது?