தேசூர் அருகே மகமாய்திருமணி கிராமம் உள்ளது. அங்கு பலர் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து 104பி என்ற அரசு பஸ் வந்தவாசி, தேசூர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது. அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், தேசூர்.