பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதி

Update: 2026-02-22 15:31 GMT

திண்டுக்கல்-நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு பஸ் நிறுத்தத்தில், நத்தம் நோக்கி செல்லும் அரசு பஸ்களில் பல நிற்காமல் செல்கிறது. இதனால் நத்தம் செல்வதற்காக அங்கு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. ஒருசில பஸ்கள் பயணிகள் கைகளை ஆட்டி பஸ்சை நிறுத்தும்படி சைகை செய்தாலும் நிற்காமல் செல்கிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி