கெடிகாரம் இருக்கு... நேரம் தெரியல...

Update: 2022-12-21 18:07 GMT

கெடிகாரம் இருக்கு... நேரம் தெரியல...

திருப்பூர் மாநகராட்சியில் வெள்ளி விழா பூங்கா உள்ளது. இந்த பூங்கா திருப்பூர் வாழ் மக்கள் அனைவராலும் பொழுதுபோக்கு மிக்க பிரமாண்டமான பூங்கா என்றழைக்கப்படுகிறது. இவ்வளாகத்தில் உள்ள கெடிகாரமானது மாதக் கணக்கில் சரியான நேரம் காட்டப்படாமலே காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் இந்த பூங்கா வழித்தடத்தில் செல்வோர் பலர் நேரத்தை பார்த்து மன குழப்பங்களுக்கு உள்ளாகியும், நேரமானாலும் நேரமிருக்கின்றதோ என நம்பி குறித்த நேரம் தெரியாமலும் பொது மக்கள் தவித்து வருகின்றார்கள். இதனை மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொண்டு உடைந்து சேதமான கண்ணாடி மற்றும் கடிகாரத்தை பழுதுபார்த்து சரியான நேரத்தை காட்டிடும் வகையில் பொது மக்களின் அவசர கால சூழ்நிலை அறிந்து சரி செய்து பயன்பாட்டிற்கு ெகாண்டுவந்தால் நமது திருப்பூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

ந.தெய்வராஜ், திருப்பூர்.

மேலும் செய்திகள்