சிறுவர் பூங்கா தேவை

Update: 2024-01-07 16:44 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள குளக்கரையைச் சுற்றி சீரமைத்து, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். அங்கு நடைபயிற்சி மேற்கொள்வர்களுக்காக நடைபாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஈமச்சடங்கு செய்வோருக்கு காரிய மண்டபம் கட்டித்தர வேண்டும். மேற்கண்ட வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரங்க.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்