பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-08-19 14:43 GMT


திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு நகரில், பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தண்டலை   

மேலும் செய்திகள்