பூங்கா அமைப்பது எப்போது?

Update: 2022-07-28 16:45 GMT

ஓசூர் தளி சாலையில் எஸ்.பி.எம். காலனியில் பூங்கா அமைக்க சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே புதர்களை அகற்றி பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.முனிராஜ், ஓசூர்.

மேலும் செய்திகள்