ஏரியூரில் அமைந்திருக்கும் அரசு அம்மா பூங்காவில் சுற்றுச்சுவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் அமைத்து தர வேண்டும் என ஏரியூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.