பூங்காவை பராமரிக்க கோரிக்கை

Update: 2023-09-10 12:14 GMT

ஓசூர் மாநகராட்சி 43-வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகரில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா நீண்ட நாட்களாக செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் பொது மக்கள் நடைபயிற்சி செய்ய சிரமப்படுகின்றனர். எனவே இந்த பூங்காவை உடனடியாக சீரமைத்து பராமரிக்க வேண்டும். அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை வசதியும், பூங்காவை சுற்றி சுற்றுச்சுவரும் உடனடியாக அமைக்க வேண்டும்.

-சாக்கப்பா, எடையநல்லூர், ஓசூர்.

மேலும் செய்திகள்