சமூக விரோத செயல்கள் தடுக்கப்படுமா ?

Update: 2022-07-23 14:09 GMT

நாமக்கல் பஸ்நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நிழல் தரும் மரங்கள் அதிக அளவில் உள்ளதால் ஏராளமானோர் இங்கு வந்த செல்கின்றனர். காதல்ஜோடிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சில காதல்ஜோடிகள் அத்துமீறுவதால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோல் மது அருந்துவோர்சிலர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே பூங்காவில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, நாமக்கல்.

மேலும் செய்திகள்