பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2023-06-07 16:59 GMT

நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட கொங்குநகர் காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தநிலையில் அந்த பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா இல்லை. எனவே அங்கு பூங்கா அமைத்து கொடுத்தால் வயதானவர்கள் நடை பயிற்சி செய்யவும், மாணவர்கள் விளையாட பெரும் உதவியாக இருக்கும். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும்.

-பாலா, நாமக்கல்.

மேலும் செய்திகள்