பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்கா

Update: 2023-02-15 17:12 GMT

 சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி மெயின்ரோடு மேச்சேரியில் புதியதாக அமைந்துள்ள சிறுவர் பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சிறுவர் பூங்காவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரா.சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.

மேலும் செய்திகள்