மதுபிரியர்களின் கூடாரமான பூங்கா

Update: 2023-02-08 14:48 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் உடற்பயிற்சிக்கான அனைத்து உபகரணங்களும் இருந்தது. போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மது பிரியர்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகள் கூடாரமாகவும் அம்மா பூங்கா மாறி உள்ளது. மேலும் அம்மா பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் இருக்கைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு பாழடைந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேணடும்.

- முத்துக்குமார், சிகரல அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்