சிறுவர் பூங்கா மேம்படுத்தப்படுமா?

Update: 2022-12-28 16:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதோடு, குழந்தைகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த பூங்கா சேதமடைந்து, விளையாட்டு கருவிகள் அனைத்தும் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே விளையாட்டு கருவிகளை சீரமைத்து சிறுவர் பூங்காவை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுதாகரன், ஊத்தங்கரை.

மேலும் செய்திகள்